பதிற்றுப்பத்து - 44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
ADVERTISEMENTS
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு
வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நோய் தபு நோன் தொடை
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ,
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி,
கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும்,
ADVERTISEMENTS
'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து,
ஆடு
நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்-
காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை:
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை
ADVERTISEMENTS
சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து,
புலம்
பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து,
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்!
கொழு இல் பைந் துணி
வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை
கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை,
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி,
துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த
மன்னர்
மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நோய் தபு நோன் தொடை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நோய் தபு நோன் தொடை