பதிற்றுப்பத்து - பதிகம்
ADVERTISEMENTS
வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுட் பத்தினிக்
கற்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி,
ADVERTISEMENTS
ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி;
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில்
இடும்பிற் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ,
ADVERTISEMENTS
சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல்
துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர்
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில்
புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து,
கெடல் அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுட்
பரணம் பாடினார் பத்துப்
பாட்டு.